business

img

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் 4 சதவீதமே....   ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு...

புதுதில்லி:
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவீதமாக  தொடரும் என்று இந்திய  ரிசர்வ்வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. தற்போதுள்ள 4 சதவீத வட்டி விகிதமே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ 3.35 சதவீதமாக  தொடரும். நாட்டின்  பொருளாதார வளர்ச்சி 2021- 2022-ல் 9.5 சதவீதமாக  இருக்கும். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறது.பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது. பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ) 4 சதவீதமாகவும்  ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும்.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022-ல் 9.5 சதவீதமாக இருக்கும்.  2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு சீரிய முறையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவை-விநியோகம் இடையிலான சமநிலையை மீட்டெடுக்க வேண்டும்  என்றுதெரிவித்தார்.

;